Thursday, 20 December 2012

சமநோக்கு!

இரண்டு பேத்திகளும்
ஓடி வந்ததுகள்.

ஓா் அகவை கூடிய மூத்தவள்
வேகமாய் வந்து
கால்களைப் பிடித்துத்
தூக்கச் சொன்னாள்.

பின்னே வந்த இளையவள்
கீேழத்து உருண்டாள்
தன்னைத் தூக்கச் சொல்லி.

போ! எங்க தாத்தா
என்று மூத்தவளும்
நானு தாத்தா
என்று இளையவளும்
உரிமை கொண்டாடி
என்னை நத்தினா்.

இருவரையும்
இருபுறமும் தூக்கி
முத்தமிட்டேன் நான்.

தாத்தாவின் தோள்களில்
சமதையாய் சவாரி செய்த போது
சந்தோஷம் பீறிட
ஒருவரை ஒருவா்
கிச்சுக் கிச்சு மூட்டினா்
புளகாங்கிதமாய்!

No comments:

Post a Comment