கம்பீரமும் கவுரவப் பராக்கிரமும் எல்லையற்ற அதிகாரமும் கொண்ட மேல் நீதிமன்றத்தில் வித்தியாசமான முறையில் வழக்குத் தொடுத்தான் சந்தான கோபாலன். வழக்கு வித்தியசமாய் இருப்பதாகவும் மாண்புமிகு நீதிபதிகள் பலபோ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பலகட்ட விவாதங்கள் நடத்தி அதன் பிறகுதான் தீர்ப்பு வழங்க முடியும் என்றும் பிரகடனப் படுத்தியது நீதிமன்றம்.
சந்தான கோபாலன் தொடுத்த வழக்கு விண்ணப்பத்தின் சாராம்சம் இதுதான்.
கோபால சந்தானம் என்ற சமூக விரோதி என் அன்னையைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறான். அவன் உதிர்த்த வசை மொழி ஆழமும் அடுக்கடுக்கான கன பரிமாணமும் கொண்டதாகும். வேசைத் தனம் கொப்பளிக்கும் அசாதாரண பாஷை அது. அம்மொழி கேட்டு நாகரீக உலகம் கிஞ்சிற்றும் சகித்துக் கொள்ளாது என்பது நிச்சயம். அடக்க ஒடுக்கப் பண்பும் அடுத்த வீடு தெரியாத பவ்வியமும் யாரையும் எறெடுத்துப் பாராத விழி நோக்கும் கொண்ட ஓர் அடுப்பங்கரைப் பெண்மணியை தேவையற்ற வார்த்தையால் விசாரித்து அவரின் ஒழுக்க சீலத்தை ஓடு பெயர்ந்த கூரை வீடாக்கி விட்டான்.
ஆம்! அன்று சந்தான கோபாலா என்று என்னை அழைத்தான் கோபால சந்தானம். சாலையில் நடந்துகொண்டிருந்த நான் நின்று ூஎன்ன என்றேன்.
அம்மா நல்லாருக்காளா என்று விசாரித்தான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன உளறுகிறான் இவன் என்று கோபம் உண்டானது. இந்தியப் பண்பாட்டின் ஆத்மாவைச் சிதைக்கும வகையில் இருந்தது அவன் கேள்வி. இருக்காளா என்கிறானே. அவள் இவள் என்று பேசுவதற்கு இவன் யார்? அந்த விசாரிப்பின் மூலம் இந்தியப் பண்பாட்டை அவமதித்து விட்டான். நிபுணத்துவம் வாய்ந்த நமது சட்ட அளவுகோலின்படி கோபால சந்தானத்துக்கு மரண தண்டனை வழஙு்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
முதலில் ஒரு நபர் அமா்வு இந்த வழக்கை விசாரித்தது. வாதியின் வாத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பண்பாடு என்றால் என்ன? அது எப்படி சிதைக்கப் பட்டது என்பதை சட்ட சரத்துக்களின் வழியே பயணித்த போது அவரால் அனுமானிக்க முடியவில்லை. அதனால் மூவா் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாகத் தீர்ப்புக் கூறினார்.
மூவர் அமா்வு கோபால சந்தானத்தைக் கூப்பிட்டு விசாரித்தது.
நீ அப்படிக் கூறினாயா?
இல்லை. நான் அப்படிக் கூறவில்லை.
பிறகு எப்படிக் கூறினாய்?
அம்மா நல்லாருக்காகளா என்றுதான் சொன்னேன்.
அதாவது?
இருக்காளா என்பதற்கும் இருக்காகளா என்பதற்கும் இடையில் ஒரு ்க ் இருப்பதை மேன்மை மிகு நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனி்க்க வேண்டும். ஆகவே என் விசாரிப்பில் பண்பாட்டுச் சீரடழிவு என்ற பேச்சுக்க இடமில்லை.
நீதிமன்றம் மிகவும் குழம்பிப் போனது. க இல்லாத ளா வும் க போட்ட ளா வும் இந்தியப் பண்பாட்டை எந்த விதத்தில் பாதிக்கின்றன என ஊகிக்க முடியவில்லை. எனினும் எல்லையற்ற கல்விச் சிறப்பும் எல்லையற்ற சட்ட ஞானமும் எல்லையற்ற அதிகாரமும் கொண்ட நீதிபதிகள் எந்தத் தீர்ப்பையும் வடழங்காமல் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது நீதிமன்றம். தீர்ப்பை இன்கனாரு நாள் வழங்குவதாகக் கூறி ஒத்தி வைத்தனர். நீதிபதிகள் கூடி பலகட்ட விவாதம் நடத்தினர். நிறைவாக சட்ட வல்லுநா்கள் அரசியல் தலைவர்கள் பொது மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய சபையில் தங்கள் தீர்ப்பை முன் வைத்தனர். தீர்பபு விபரம் பின் வருமாறு.
க போட்ட ளா வும் க ேபாடாத ளா வும் வெவ்கவறான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. இது மக்கள் பேசும் சாதாரண மொழிதான் என்றாலும் மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்த இருந்தது. அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்த நீதிமன்றம் நீதி வழங்க முடியும். ஆகவே மக்கள் தாங்கள் பேசும் மொழியைத் திருத்தமாகவும் சுத்தமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நூறுபேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும். அவர்கள் கூடி விவாதித்து புதிய மக்கள் மொழி ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய சொற்கள் புதிய சொற்றொடர்கள் புதிய பழமொழிகள் அவற்றுக்கான புதிய அர்த்தங்கள் என்று அந்த மொழி அமைப்பு இருக்கலாம். அதற்கான அகராதியை உருவக்கி புழக்கத்தில் விடவேண்டும். அலாவுதின் கில்ஜி தலைநகரத்தை மாற்றியது போல அரசாங்கம் மக்களின் பேச்சு மொழியைத் தன் அதிகாரக் கரம் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்திரவிடுகிறது.
சந்தான கோபாலன் தொடுத்த வழக்கு விண்ணப்பத்தின் சாராம்சம் இதுதான்.
கோபால சந்தானம் என்ற சமூக விரோதி என் அன்னையைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறான். அவன் உதிர்த்த வசை மொழி ஆழமும் அடுக்கடுக்கான கன பரிமாணமும் கொண்டதாகும். வேசைத் தனம் கொப்பளிக்கும் அசாதாரண பாஷை அது. அம்மொழி கேட்டு நாகரீக உலகம் கிஞ்சிற்றும் சகித்துக் கொள்ளாது என்பது நிச்சயம். அடக்க ஒடுக்கப் பண்பும் அடுத்த வீடு தெரியாத பவ்வியமும் யாரையும் எறெடுத்துப் பாராத விழி நோக்கும் கொண்ட ஓர் அடுப்பங்கரைப் பெண்மணியை தேவையற்ற வார்த்தையால் விசாரித்து அவரின் ஒழுக்க சீலத்தை ஓடு பெயர்ந்த கூரை வீடாக்கி விட்டான்.
ஆம்! அன்று சந்தான கோபாலா என்று என்னை அழைத்தான் கோபால சந்தானம். சாலையில் நடந்துகொண்டிருந்த நான் நின்று ூஎன்ன என்றேன்.
அம்மா நல்லாருக்காளா என்று விசாரித்தான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன உளறுகிறான் இவன் என்று கோபம் உண்டானது. இந்தியப் பண்பாட்டின் ஆத்மாவைச் சிதைக்கும வகையில் இருந்தது அவன் கேள்வி. இருக்காளா என்கிறானே. அவள் இவள் என்று பேசுவதற்கு இவன் யார்? அந்த விசாரிப்பின் மூலம் இந்தியப் பண்பாட்டை அவமதித்து விட்டான். நிபுணத்துவம் வாய்ந்த நமது சட்ட அளவுகோலின்படி கோபால சந்தானத்துக்கு மரண தண்டனை வழஙு்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
முதலில் ஒரு நபர் அமா்வு இந்த வழக்கை விசாரித்தது. வாதியின் வாத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பண்பாடு என்றால் என்ன? அது எப்படி சிதைக்கப் பட்டது என்பதை சட்ட சரத்துக்களின் வழியே பயணித்த போது அவரால் அனுமானிக்க முடியவில்லை. அதனால் மூவா் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாகத் தீர்ப்புக் கூறினார்.
மூவர் அமா்வு கோபால சந்தானத்தைக் கூப்பிட்டு விசாரித்தது.
நீ அப்படிக் கூறினாயா?
இல்லை. நான் அப்படிக் கூறவில்லை.
பிறகு எப்படிக் கூறினாய்?
அம்மா நல்லாருக்காகளா என்றுதான் சொன்னேன்.
அதாவது?
இருக்காளா என்பதற்கும் இருக்காகளா என்பதற்கும் இடையில் ஒரு ்க ் இருப்பதை மேன்மை மிகு நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனி்க்க வேண்டும். ஆகவே என் விசாரிப்பில் பண்பாட்டுச் சீரடழிவு என்ற பேச்சுக்க இடமில்லை.
நீதிமன்றம் மிகவும் குழம்பிப் போனது. க இல்லாத ளா வும் க போட்ட ளா வும் இந்தியப் பண்பாட்டை எந்த விதத்தில் பாதிக்கின்றன என ஊகிக்க முடியவில்லை. எனினும் எல்லையற்ற கல்விச் சிறப்பும் எல்லையற்ற சட்ட ஞானமும் எல்லையற்ற அதிகாரமும் கொண்ட நீதிபதிகள் எந்தத் தீர்ப்பையும் வடழங்காமல் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது நீதிமன்றம். தீர்ப்பை இன்கனாரு நாள் வழங்குவதாகக் கூறி ஒத்தி வைத்தனர். நீதிபதிகள் கூடி பலகட்ட விவாதம் நடத்தினர். நிறைவாக சட்ட வல்லுநா்கள் அரசியல் தலைவர்கள் பொது மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய சபையில் தங்கள் தீர்ப்பை முன் வைத்தனர். தீர்பபு விபரம் பின் வருமாறு.
க போட்ட ளா வும் க ேபாடாத ளா வும் வெவ்கவறான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. இது மக்கள் பேசும் சாதாரண மொழிதான் என்றாலும் மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்த இருந்தது. அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்த நீதிமன்றம் நீதி வழங்க முடியும். ஆகவே மக்கள் தாங்கள் பேசும் மொழியைத் திருத்தமாகவும் சுத்தமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நூறுபேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும். அவர்கள் கூடி விவாதித்து புதிய மக்கள் மொழி ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய சொற்கள் புதிய சொற்றொடர்கள் புதிய பழமொழிகள் அவற்றுக்கான புதிய அர்த்தங்கள் என்று அந்த மொழி அமைப்பு இருக்கலாம். அதற்கான அகராதியை உருவக்கி புழக்கத்தில் விடவேண்டும். அலாவுதின் கில்ஜி தலைநகரத்தை மாற்றியது போல அரசாங்கம் மக்களின் பேச்சு மொழியைத் தன் அதிகாரக் கரம் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்திரவிடுகிறது.
No comments:
Post a Comment