Tuesday, 29 January 2013

இ்னறு மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற இயற்பெயா் கொண்ட காந்தியடிகளின் 65வது நினைவு நாள். அவா் சுட்டுக் கொல்லப் பட்டு அறுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

இன்றைய தினமணியில் அவரை நினைவுகூரும் கட்டுரை ஒன்று எழுதப் பட்டுள்ளது. தமுஎகச மாநிலக் குழு உறுப்பினா் வெ. ஜீவக் குமார் அதை எழுதியுள்ளார். பல திடுக்கிடும் சம்பவங்கள்  விவரிக்கப் பட்டுள்ளன. காந்திஜியின் இரண்டாவது புதல்வன் மணிலாலைச்  சென்னைக்கு அனுப்பி வைத்தார் காந்திஜி என் பெயரைச் சொல்லாமலே அங்கே நீ வாழ்ந்து காட்டு என்று அறிவுரை கூறினார். அதேபோல் மணிலால் சென்னை வீதிகளில் மூடை சுமந்து சம்பாதித்து வாழ்ந்தாராம். சந்தைப் புழுதியில் படுத்து உறங்கித் தன் காலத்தைக் கழித்தாராம்.

கடைசி வரை அவா் தன் பிள்ளைகளுக்காக எதுவுமே செய்யவில்லை. மூத்த புதல்வர் ஹரிலால் தெருவோரப் பிச்சைக் காரனாய் வாழ்ந்திருக்கிறார். நான்கு பிள்ளைகளோடு அவா் மனைவியும் சேர்ந்து சிறைக் கொடுமை அனுபவித்து மடிந்தனா். தியாகம் என்பது வாழ்வைச் சீரழித்துவிட்டுச் செய்வதல்ல என்பதை காந்தி உணர்நதிருக்கவில்லை. குடும்பத்தை நிர்க்கதியில் விட்டுவிட்டு நாட்டுக்காகப் பாடுபட்டார்.

கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போகம் அனுபவிக்கும் இன்றைய தலைவர்களை ஒப்பிடும் போது காந்திஜி ஆயிரம் மடங்கு உயா்ந்த பண்பு கொண்டவா். ஆனாலும் குடும்ப மேன்மைக்காகவும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

அந்தத் தியாகம் உணர்ச்சியோடு கலந்த உணர்வுநிலைத் தாக்கம் கொண்டது. சமூகம் ஏற்காத நடைமுறைகளைக் கைக் கொண்டால் அது தீயது என்று நாம் வரையறை செய்கிறோம். அதுபோல்தான் இதுவும். குடும்பத்தைப் பாதுகாக்காத தலைமைப் பண்பு பூமிப் பிடிப்பு இல்லாத நீரூற்றுப் போன்றது.

30-1-2013

நியாயப் படுத்த வேண்டாத மதக் கோட்பாடுகள்.

எகிப்தில் இலங்யகயைச் சேர்ந்த 17 வயதுக் குமரி (ஆய்ஷா பீவி என்று நினைக்கிசறன்) மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு  செத்துப் போனாள். சாகும் வரை கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப் பட்டிருரக்கிறது. நீதிபதியே முதல் கல்லை எறிந்து தண்டனை இயக்கத்தைத் தொடஙு்கி வைத்ததாகத் தெரிகிறது.

உயிர்மை ஆசிரியா் மனுஷ்யபுத்திரன் இந்தக் கொடூரத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார். 18 வயது நிரம்பாத இளம் பெண்ணை இந்த வகையில் கொல்வது கோைழத்தனம் என்று சாடி இருக்கிறார். தௌகீத் ஜமாத் என்ற அமைப்பு அவரைக் கடுமையாக வார்சித்ததோடு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. ஓர் இஸ்லாமியராகிய மனுஷ்யபுத்திரன் இப்படி ஷரியத் சட்டத்துக்கு எதிராக எழுதுவதை அந்த அமைப்பு விரும்பவில்லை.

விஸ்வரூபம் திரைப் படம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாகக் கூறி அந்தத் திரைப் படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று போர்க் கொடி தூக்குகிறார்கள்.

ஏன் இலர்கள் கருத்துச் சுதந்திரத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்று கொியவில்லை. விமர்சனத்தை ஏற்காமல் எதிர் விமர்சனம் செய்யயலாம். ஷரியத் சட்டத்தை நியாயப் படுத்தும் வகைியில் சமூக நியாயத்துடன் கூடிய அதாரங்களை முன்வைக்கலாம்.

இப்படிெயல்லாம் தேவையில்லாமல்  தங்கள் மதக் கோட்பாடுகளை நியாயப் படுத்துவது வரலாற்றுச் சக்கரத்தைப் பின் நோக்கிச் சுற்றுவதோடு ஜனநாயகச் சிந்தனைகளைக் குழிதோண்டிப் புதைப்பதும் ஆகும். இப்போது அவரகளுக்கு ஆதரவாக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இடது சிந்தனையாளர்களின் குரலும் எதிர்காலத்தில் வலுவுிழக்கக் கூடும். தங்கனளத் தாங்களே பலவீனப் படுத்த மட்டுமே பயன்படும் இத்தகைய ஜனநாயக விரோதக் கோட்பாடுகளைக் கைவிடுவது இந்திய ஒற்றுமைக்கும் இவர்களின் பரந்துபட்ட வாழ்வியல் விரிவாக்கத்துக்கும் நல்லது.

29-1-2013

Wednesday, 16 January 2013

சிந்தனாஞானத்தின் ஆளுகை!

கடந்த 8-1-13ல் இந்தியப் படை வீரர் ஹேமந்த் ராஜ் பாகிஸ்தான் படையினரால் கொடூரமான முறையுில் சிரச் சேதம் செய்யப் பட்டார். தலையைத் துண்டித்து எடுத்துக் கொண்டு போய்விட்டனர். இது சர்வதேச விதிமுறைகளை மீறிய போர்க் குற்றம் ஆகும்.

மோதலின் போது படை வீரர்கள் சாவது யுத்த எல்லை வரையறைக்குள் வந்து விடும். குண்டடிபட்டு சாகலாம். ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரிக்கலாம். கொல்லப் பட்டவரின் தேசம் கண்டனம் தெரிவிக்கும். உலக நீதிமன்றம் இதை ஒரு வழக்காகவே எடுத்துக் கொள்ளாது. சித்திரைவதை செய்து கொல்வது கூட விசாரணை என்ற நியாய எல்லைக்குள் வந்து விடும். ஆனால் தலையை வெட்டி எடுத்துச் செல்வது என்பது போர் புரியத் தூண்டும் குற்றத்தை விடக்  கடுமையானதாகும்.

இந்தியப் பிரமா் மன்மோகன் சிங்கும் ராணுவத் தளபதி விக்ரம சிங்கும் மிகச் சரியாகவே பதிலடி கொடுத்திருக்கின்றனா்.

இந்த அராஜகத்திற்குப் பிறகு பழயை நிலையில் பாகிஸ்தானுடனான இந்திய உறவைத் தொடர முடியாது என்று பிரதமர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

போர்க் குற்றம் என்பது வேறு. கொலைக் குற்றம் என்பது வேறு. போர் வீரன் கொலை வெய்வது சாதாரண மனிதன் செய்யும் கொலைலய விடப் பன்மடங்கு தண்டினைக் குரியதாகும் என்றார் விகரமசிங்.

இப்போது பாகிஸ்தானில் சிலவும் உள்நாட்டுக் குழப்பத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அந்நாட்டு ராணுவம் இந்த அக்கிரச் செயலில் ஈடுபடுவதாகவே படுிகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக இருக்கும் அந்நாட்டு மக்களின் கோபத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி விட்டால் ராணுவப் புரட்சி என்ற அவா்களின் நோக்கம் எனிதில் நிறைவேறும். அதோடு வெறிகொண்டு அலையும் இஸ்லாமியத் திவிரவாதிகளையும் தங்களின் பஙு்குதாரராய் இணைத்துக் கொள்ளலாம்.

மதம் என்ற வகையில் இஸ்லாம் நோ்மையானது. ஆனல் அதைக் கடைப்பிடிப்பவா்கள் அறியாமை வயப் பட்டு அம்மதத்துக்கு விரோதமாய்ச் செயல் படுகின்றனா். மத அறியாமை வெகுஜன விரோதத்தில் மையமிட்டு நிற்கிறது. ஷரியத் சட்டத்தின் வழியே ஆட்சி செய்யும் நாடுகளின் ராணுவங்களும் தீவிரவாதிகளும் இவ்விதமாகவே வெகுஜன விரோதிகளாய் மாறுகின்றனா்.

பொருளாரார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் உணர்ச்சிகளற்ற உணர்வு ரீதியான சிந்தனாஞானம் வலுப் பெறும் போதுதான் இப்படிப் பட்ட அநியாய ஆக்கிரமிப்புக்களும் கொலைகளும் தவிர்க்கப் படும்.

17-1-2013

Thursday, 10 January 2013

ஜனநாயக சக்கரவா்த்திகள்.

     தொடர் வண்டிக் கட்டணங்களை உயர்த்தி அரசாணை வௌியிட்டிருக்கிறது மத்திய அரசு. பயணிகள் கட்டணம் இருபது விழுக்காடு உயர்த்தப் படடுள்ளது. இ்ந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன. அடிக்கடி ரயில் பிரயாணம் செய்பவா்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக் கூடியது. பெரும் முதலாளிகளுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் சலுகைகளை வாரி வழங்கும் அரசு சாதாரண ஜனங்களுக்குப் பொருளார தண்டனையை அடிக்கடி வழங்கிக் கொண்டே இரு்ககிறது.

      ஏற்கனவே ஆளுங்கட்சியாய் இருந்து இதே வேலையைச் செய்துொண்டிருந்த பி ஜே பி உட்பட எல்லாக் எதிர்க் கட்சிகளுமே (தி மு க தவிர)   எதிர்ப்புத்  தெரிவித்துள்ளன. ஆச்சர்யம் என்னவென்றால் ஆ தி மு க மிகக் கடுமையாகச் சாடி இருப்பதுதான்.

     ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற மறு வாரமே 100 விழுக்காடு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. தேனியில்இருந்து மதுரை செல்ல 21 ரூபாய் என்றிருந்த கட்டணம் 42 ரூபாய் என்று ஆக்கப் பட்டது. 100 விழுக்காட்டுடன் ஒப்பிடும் போது 20 வடிழுக்காடு மிகவும் குறைவு.

     கட்டண ஏற்றத்தின் பொருளாதார அராஜகவாதக் கட்சிகள் காங்கிரஸும் அதிமுகவும். ஒப்பீட்டளவில் காஙகிரைஸை அதிமுக மிஞ்சிவிட்டது. அது ரயில் கட்டண உயர்வை வரவேற்றிருக்க வேண்டும்.  அல்லது இன்னும் பத்தாது என அறிக்கை விடுவதுதான் யதார்த்தமானதாய் இருக்கும். இந்தக் கட்டண உயர்வை விமர்சித்திருப்பது தமிழ் மக்கள் ஏமாளிகள் என்றோ முட்டாள்கள் என்றோ கணித்திருப்பதன் உச்சம் என்றே நான் கூறுவேன்.

     வாழ்க ஜனநாயக யுகத்தின் சாம்ராஜ்ய சக்கரவா்த்திகள்.

ஜனவரி 10 2013

Thursday, 3 January 2013

எதிர்கால இருட்டு



1-2013

,d;W vd; iff;F xU miog;gpjo; te;jJ. Mrphpa mikg;G xd;W mr;rpl;L ntspapl;bUf;fpwJ. tpNtfhde;jhpd; ghh;itapy; Mrphpag; gzp vd;gJ jiyg;G. midj;J Mrphpah;fSf;Fk; miog;G tpLf;fg; gl;Ls;sJ. $l;lk; eilngWk; ,lk; NtjGhp rpj;gthdee;jh; M];ukk;. rpwg;Giu Mw;Wgth; klj;jpd; jiyth; Xq;fhuhde;jh. Kjd;ikf; fy;tp mYtyh; ,uhkrhkp> ehlhh; ru];tjp fy;tpapay; fy;Yhhp nrayhsh; uh[Nkhfd;> tpj;aghujp jkpo; khepyr; nrayhsh; tp];tehjd; Mfpa Kf;fpa];jh;fs; gq;Nrw;fpd;wdh;.
vd;dplk; Nehl;bi] toq;fpa Mrphpah; ey;y rptd; mth;fsplk; ,e;jf; $l;lj;jpd; Nehf;fk; gw;wpf; Nfl;Nld;. Md;kPf czh;T Fiwe;J tUtjhy; ghypay; gyhj;fhuq;fSk; ngz;fspd; muh[fKk; kJNghijg; gof;fKk; $btpl;ld vd;whh;. ngz;fspd; muh[fk; vg;gbf; $baJ vd;W Nfl;Nld;. rk;ghjpf;Fk; ngz;fs; fztd;khh;fis kjpg;gjpy;iy. xOf;f rPyj;ijf; filg; gpbg;gjpy;iy Nghd;w Mzhjpf;fr; rpe;jid topg;gl;l fhuzq;fisr; nrhd;dhh;. ,thplk; vjph;f; fUj;J $WtJ tPz; tpuak; vd;gjhy; mikjpaha; ,Ue;J tpl;Nld;. mth; Vw;fdNt Mh;. v]; v]; ,af;fj;jpd; kiwKf c Wg;gpdh;. mth;jhd; ,e;jf; $l;l Vw;ghl;Lf;fhd %yfh;j;jh vd;gij mth; Ngr;rpy; ,Ue;J Ghpa Kbe;jJ. Mf Mrphpah;fs; kj;jpapy; uh\;l;hpa Rak; Nrtf; rq;f; CLUtpf; nfhz;bUf;fpwJ. ,lJrhhpfs; mikg;G hPjpahd jq;fs; gyj;ij ,oe;J nfhz;bUf;Fk; ,e;j Ntisapy; mth;fs; tYtile;J nfhz;bUf;fpwhh;fs;. Md;kPfk; vd;w Nghh;itapy; ,e;Jj;Jth rf;jpfs; midj;J kdq;fSf;Fs;Sk; Eioe;J nfz;bUf;fpd;wd.
Njrj;jpd; vjph;fhyk; ,Uz;L njhpfpwJ.