Thursday, 14 February 2013

காதல் என்பது.......

இ்னறு காதலா் தினம். மனமும் உணா்வும் ஒன்றிய இருபால் இளைஞா்கள் எவ்விதத் தடங்கலும் இன்றி சந்தோஷமாய் வாழ வேண்டும் என்ற கருத்தாக்கம் கொண்டது. அவா் இவரை விரும்பும் போது இவா் அவரை விரும்பா விட்டால் ஒதுங்கிக் கொள்வதே உத்தமம். இப்போதெல்லாம் இளைஞா்கள் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வதில்லை. உணா்வு நிலை அழிந்து உணா்ச்சிக்கு பலியாகி உன்மத்தம் கொள்கின்றனா்.

வினோதினியின் சங்கதியும் அப்படிப் பட்டதுதான். காரைக்காலைச் சோ்ந்தவா் வினோதினி. பொறியியல் தேரி சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவா். ஒருதலையாய்க் காதலித்த சுரேஷை அவள் நிராகரித்த போது அவன் மிருகத்தனமாய் அவள் மேல் திராவகம் ஊற்றிக் கொன்றுவிட்டான். மூன்று மாதகால உயிர்ப் போராட்டத்துக்குப் பின்பு அந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது. பெற்றோருக்கு ஒரே மகள் அவள். வாச்மேன் வேலை செய்த அவள் தந்தைக்கு யாரொருவரும் துணை இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை நிவாரண உதவி கிடைக்கலாம். அந்த இழப்பை ஈடுி செய்ய உதவாது. அவள்  தந்தைக்கு அரசு வேலை கிடைத்தால் நல்லது.

காதல் என்பது மனமும் உணா்வும் கலந்த ஓா் அமானுஷ்ய சக்தி. மனதோடு மனம் பொருந்திப் போகக் கூடிய ஆத்மப் பிணைப்பு ஜாடியும் மூடியும் போல. அதை உடலின் வாஞ்சைக்கு அடிபணியச் செய்து உருகிப் போவதும் அல்லது எதிர்ப் பாலை உருக்குலையச் செய்வதும் கயமைத் தனம். உடனடி தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும். திராவக விற்பனை கட்டுக்குள் இருக்கும் படி கண்காணிக்க வேண்டும். உரிமம் இல்லாமல் விற்கப் பட்டு இருந்தால் விற்பனையாளன் மீதும் தண்டனைக் கரம் நீள வேண்டும். இன்றைய பண்பாட்டுச் சூழலைக் கருத்தில் கொண்டு காதலா் தினக்கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

டெல்லி மாணவி நிர்பய வுக்குப் பிறகு மீண்டும் ஒரு படுகொலை நிகழ்த்தப் பட்டுள்ளது.

Oh my earth!

No comments:

Post a Comment