Saturday, 16 November 2013

சச்சின்.

பனியடா்ந்த பாருலகில்
மணியடா்ந்த பரல்வௌியாய்
கிரிக்கெட் விளையாட்டு!

மட்டையும் பந்தும்
நடுநடுங்கி அடி தழுவி
கைவிரலால் ஆட்டுவித்த
சச்சினை வணங்கின.

இருநூறு போட்டிகளில்
நிறைவு நிலை அடைந்த போது
மண்ணை வணங்கி
மண் சார்ந்த வாடி்க்கையை வணங்கி
பூவிதழாய் உதிர்ந்த கண்ணீரையும் வணங்கி
விடைபெற்ற மாமேதை!

அவருக்கு பாரத ரத்தினா!

நிகரற்ற தேசத்தின்
நிகரற்ற விருது அது.
சச்சினை சூடித் தன்னை
அலங்கரித்துக் கொ்ணடது.

சாதனைச் செல்வன்
சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment