Tuesday, 30 April 2013

மேதினம்.

இன்று 124ஆவது மேதினம். மௌனமாய் அடிமைப் பட்டுக் கிடந்த தொழிலாளத் ோதழர்கள் பொங்கிப் பிரவகித்த பெருமூச்சு வரலாற்றை ஓரங்கட்டி விட்டு மௌனம் உடைத்த மகத்தான போராட்ட வரலாற்றைத் தாங்கி நிற்கும் நாள்!

1832ஆம் ஆண்டு அமரிக்க நகரமான பாஸ்டன் கப்பல் கட்டும் துறைமுகத்தில் தச்சு வேலை செய்த தொழிலார்கள் பத்து மணி நேர  வேலை கேட்டு வேலை நிறைுத்தம் செய்தனா். அதேபோல் 1835இல் பிலடல்பியா. பென்சில்வேனியா ஆகிய நகரங்களிலும் இதே கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1877இல் நிலக்கரி சுரங்கத் தொழடிலாளா்களும் இரும்பு தொழிற்சாலை ஊழியா்களும் அபரிமிதமான ஆவேசத்தோடு போர்க்களத்தில் இறங்கினா்.

இதற்கிடையில் தத்துவ ஆசான் தாரல் மார்க்ஸ் பத்துமணி நேரக் கோரிக்கையை எட்டு மணி நேரக் கோரிக்கையாய் மாற்றி அறிக்கை வௌியிட்டார்.

இதன் பிறகு அமரிக்காவில் இயங்கிய பல்வறு தொழிற்சங்கங்களை இணைத்து அமெரிக்கத் தொழிலாளா் கூட்டமைப்பு என்ற தலைமைச் சங்கம் அமைக்கப் பட்டது. இதன் பிறகு போராட்டக் களம் விரிவும் ஆழமும் கண்டு தீயாய்த் தகித்தது.

இந்தச் சங்கம் 1886 மே ஒன்றாம் நாள் எட்டு மணி நேர  வேலைலைய வலியுறுத்தி தேசம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தது. நியூயார்க் பிலடல்பியா சிக்காகோ மில்விக்கி சின்சினேட்டி பால்டிமோர் என அனைத்து நகரங்களிலும் 3 லட்சத்து 50 ஆயிரம் போ் (1200கம்பனிகளில் வேலை செய்தவா்கள்) கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பெரும் நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில்கள் ஓடவில்லை. மின்சாரம் துண்டிக்கப் படடது. அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

மே மூன்றாம் தேதி மெக்கர்மி ஹார்வஸ்டிங் மெஷின் என்ற நிறுவனத்தின் முன் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் கூடி ஆா்ப்பாட்டம் செய்தனா். போலி0ஸார் கண்மூடித்தனமாக தொழிலாளா்கள் மேல் சுட்டனா். அதில் 4 போ் உயிரிழந்தனா்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மறுநாள் ஹேமார்க்கெட்டில் கண்டன முழக்கம் செய்தனா். தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாத தொழிலாளா்கள் மேல் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. தொழிற்சங்கத் தலைவா்கள் கைது செய்யப்ப ட்டனா். அப்போது கூட்டத்தில் திடீரென வெடித்த குண்டு வெடிப்பால் காவலா் ஒருவா் இறந்தார்.

கைது செய்யப் பட்ட தொழிற்சங்கத் தலைவா்களில் 4 போ் 1887 நவம்பா் 11 ல் தூக்கில் இடப் பட்டனா். அவா்கள் அகஸ்டஸ்பஸ் அல்பா்ட் பார்சன்ஸ் அடால்ப் பிஷர் ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆவா். (1904ஆண்டு நடந்த மறு விசாரணையில் அவா்கள் தூக்கிலிப் பட்டது செல்லாது எனத் தீா்ப்புக் கூறியது.)

நவம்பா் 13ஆந்தோி நடந்த இறுதி ஊா்வலத்தில் 5 லட்சம் போ் கலந்து கொண்டனா். அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் கருப்பு தினமாக அனுஷ்டிக்கப் பட்டது.

1889 ஜூலை 14 அன்று பாரிஸ் நகரில் கூடிய உலகத் தொழிலாளா் சங்கங்கள் மே முதல் நாளை தொழிலாளா் தினம் பிரகடனப் படுத்தியது. 90 விழுக்காடு நாடுகள் இதை ஏற்றுக்கொண்டு தொழிலாளா்களுக்குப் பல சலுகைகளைச் செய்கின்றன. மே தினத்துக்கான விதை ஊன்றப் பட்ட அமெரிக்காவில் இன்னும் அந்த நாள் அங்கீகரிக்கப் படவில்லை.

தேவைப் படும் போது உைழப்பது மிருக குணம். தேவை கருதி உைழப்பது மனித குணம். சுய நலம் கருதி மற்றவா்ளை உைழக்க வைத்து சுகம் காண்பது முதலாளித்துவ குணம்.

No comments:

Post a Comment